இப்பதிவினை தமிழில் வழங்க எனது நீண்டநாள் விருப்பமும்கூட…
இப்பதிவில் நான் எழுதிய குறுந்தொகுப்புளை இட ஆசைப்படுகிறேன்…
அன்னை- இறைவன் எல்லா இடங்களிலும் இருப்பதாய் உள்ள சாட்சி…
இன்று நானாக இருக்க,
உந்தன் உயிரான உதிரத்தை.
அன்று அமிர்தமாக தந்தாய் – நீ ! ! !
உந்தன் அன்பான உணர்ச்சிகளை
என்றும் ஆசியாய் பொழிந்து – நீ ! ! !
எந்தன் வாழ்வினை வடிவமைக்கும்
உளியாய்
அன்றும்,இன்றும்,என்றென்றும் இனியும்
இருந்தமைக்கும்
என் அன்னையாக வந்தமைக்கும்
தலைவணங்குகிறேன்.
—————————————————————————————————————————-
நண்பர்கள் – இறைவனின் படைப்பில் இன்றியமையா உறவு…
பல உயிராய் நடமாடும்
ஓர்உருவமாய்
என்னை மாற்றிய கடவுளுக்கு
நன்றிகள் கோடி…
—————————————————————————————————————————-
அவள் மனம் காதலை கொண்டு இருக்கும் போது
மனம் உன்னை தேட
நீ
எங்கும் இல்லாமல்…
விழிகள் உன்னை
காண ! ! ! !
புன்னகை என்னை
அறியாமல் எழ! ! ! !
கண்கள் கலங்க
காத்திருப்பேன்
நீ
என் அன்பை உணரும் வரை….
—————————————————————————————————————-
அவனின் இரகசிய உணர்வு…
அவள் கண்கள் என்னை கண்டும் காணவில்லை
என்னால் உணரமுடிந்தது !
–
அவள் மனம் என்னைச் சுற்றுவது
என்னால் அதை உணரமுடிந்தது !
–
அவள் கண்கள் தேடித்துடித்தது,
தென்றலின் மென்மைஉணரமுடிந்தது
அவளின் மனம் இன்னும் உணரமுடியவில்லை…
——————————————————————————————————————————————–
அவள் – அவன் மனதில்
தமிழின் அழகாய்
செவியின் பாடலாய் : : மலரின் மனமாய்
விதையின் துணிச்சலாய்
உலகின் இயற்கையாய் : : சிகரத்தின் நுணியாய்
அமிர்தத்தின் இனிமையாய்
அழ்க்கடலின் இரகசியமாய்
சூரியனின் கதிராய் : : மதியின் குளிராய்
விண்வெளியின் புவிஈர்ப்பாய்
குழந்தையின் மொழியாய் : : தென்றலின் மென்மையாய்
உயிரின் ஓவியமாய்
நேரத்தின் துடிப்பாய் : :குருதியின் அடர்த்தியாய்
ஓவியத்தின் பொருளாய்
நதியின் வளைவாய்
என்னுள் நீயாய்;
என்றும் உயிராய் : : காணும் கண்களாய்
நீ இருப்பாய்……………
—————————————————————————————————————————————-
அன்பானவரின் பிரிவின் வெளிப்பாடு…
எக்கணம் உன்னை கண்டேன் !!!!
நினைவில் இல்லை…..
எக்கணம் உன்னை என்னுள் கொண்டேன் !!!!
மறக்கமுடியவில்லை….
இக்கணம் உன்னை கண்டேன் !!!!
என் கனவு விழிகளில்….
எக்கணமும் என் உயிராய் இருப்பாய் –
ஓர் உயிராய்…
எத்திசையும் உன் நினைவு கண்டேன் !!!!
என்னை அறியாமல்….
————————————————————————————————————————————–
உதவி – மனிதனின் மகத்தான செயல்…இறைவனின் ஆசியும் கூட….
உதவி புரிபவர்களுக்கு –
உதவியின்மையின் அருமை தெரியும்..
உதவுங்கள்..
நன்றி கூறுங்கள்….
———————————————————————————————————————————————
தவறுகள் ..
வெற்றியின் படிகளாகவும்…
வெற்றிப்பாதையின் வழிகள் அறியவும்
புதிய கண்டுப்பிடிபின்
வித்தாகவும்…
வாழ்வின் திருப்பு
முனையாகவும்…
மாற்றத்தின் அடித்தளமாகவும்…
மனிதனின் உடன்வளர்ந்த ஒன்று.
இத்தொகுப்புகள் சற்று போர் அடித்திருக்கும் என்று எண்ணுகிறேன்…மென்மேலும் உங்கள் கருத்துகளை கூறுவீர்கள் என்று நான் நம்புகிறேன்..என் நண்பருக்கு மிக்க நன்றி கூற நான் கடமை பட்டு இருக்கிறேன்…
நன்றி நண்பரே…
மென்மேலும் கவனிக்க :http://mabig.wordpress.com/