குறுந்தொகுப்பு…! ! ! !


இப்பதிவினை தமிழில் வழங்க எனது நீண்டநாள் விருப்பமும்கூட…
இப்பதிவில் நான் எழுதிய குறுந்தொகுப்புளை இட ஆசைப்படுகிறேன்…

அன்னை- இறைவன் எல்லா இடங்களிலும் இருப்பதாய் உள்ள சாட்சி…

இன்று நானாக இருக்க,

உந்தன் உயிரான உதிரத்தை.

அன்று அமிர்தமாக  தந்தாய் – நீ ! ! !

உந்தன் அன்பான உணர்ச்சிகளை

என்றும் ஆசியாய் பொழிந்து – நீ ! ! !

எந்தன் வாழ்வினை வடிவமைக்கும்

உளியாய்

அன்றும்,இன்றும்,என்றென்றும் இனியும்

இருந்தமைக்கும்

என் அன்னையாக வந்தமைக்கும்

தலைவணங்குகிறேன்.

imagesmom

—————————————————————————————————————————-

நண்பர்கள் – இறைவனின் படைப்பில் இன்றியமையா உறவு…

பல உயிராய் நடமாடும்

ஓர்உருவமாய்

என்னை மாற்றிய கடவுளுக்கு

நன்றிகள் கோடி…

Friendship-Day-2012-Wallpapers-FunRocker.Com-15

                 —————————————————————————————————————————-

அவள் மனம் காதலை கொண்டு இருக்கும் போது

மனம் உன்னை தேட

நீ

எங்கும் இல்லாமல்…

விழிகள் உன்னை

காண ! ! ! !

புன்னகை என்னை

அறியாமல் எழ! ! ! !

கண்கள் கலங்க

காத்திருப்பேன்

நீ

என் அன்பை உணரும் வரை….

imagesg

                               —————————————————————————————————————-

அவனின் இரகசிய உணர்வு…

அவள் கண்கள் என்னை கண்டும் காணவில்லை

என்னால் உணரமுடிந்தது !

அவள் மனம்  என்னைச் சுற்றுவது

என்னால் அதை  உணரமுடிந்தது !

அவள்  கண்கள் தேடித்துடித்தது,

தென்றலின் மென்மைஉணரமுடிந்தது

அவளின் மனம் இன்னும் உணரமுடியவில்லை…

sadboy

                        ——————————————————————————————————————————————–

அவள் – அவன் மனதில்

தமிழின் அழகாய்

செவியின் பாடலாய் : : மலரின் மனமாய்

விதையின் துணிச்சலாய்

உலகின் இயற்கையாய் : : சிகரத்தின் நுணியாய்

அமிர்தத்தின் இனிமையாய்

அழ்க்கடலின் இரகசியமாய்

சூரியனின் கதிராய் : : மதியின் குளிராய்

விண்வெளியின் புவிஈர்ப்பாய்

குழந்தையின் மொழியாய் : : தென்றலின் மென்மையாய்

உயிரின் ஓவியமாய்

நேரத்தின் துடிப்பாய் : :குருதியின் அடர்த்தியாய்

ஓவியத்தின் பொருளாய்

நதியின் வளைவாய்

என்னுள் நீயாய்;

என்றும் உயிராய் : : காணும் கண்களாய்

நீ இருப்பாய்……………

        —————————————————————————————————————————————-

அன்பானவரின் பிரிவின் வெளிப்பாடு…

எக்கணம் உன்னை கண்டேன் !!!!

நினைவில் இல்லை…..

எக்கணம் உன்னை என்னுள் கொண்டேன் !!!!

மறக்கமுடியவில்லை….

இக்கணம் உன்னை கண்டேன் !!!!

என் கனவு விழிகளில்….

எக்கணமும் என் உயிராய் இருப்பாய் –

ஓர் உயிராய்…

எத்திசையும் உன் நினைவு கண்டேன் !!!!

என்னை அறியாமல்….

sad-angel-free-screensavers-777898

            ————————————————————————————————————————————–

உதவி – மனிதனின் மகத்தான செயல்…இறைவனின் ஆசியும் கூட….

உதவி புரிபவர்களுக்கு –

உதவியின்மையின் அருமை தெரியும்..

உதவுங்கள்..

நன்றி கூறுங்கள்….

helping-hands-8.17.12

         ———————————————————————————————————————————————

 தவறுகள் ..

வெற்றியின் படிகளாகவும்…

வெற்றிப்பாதையின் வழிகள் அறியவும்

புதிய கண்டுப்பிடிபின்

வித்தாகவும்…

வாழ்வின் திருப்பு

முனையாகவும்…

மாற்றத்தின் அடித்தளமாகவும்…

மனிதனின் உடன்வளர்ந்த ஒன்று.

always-make-new-mistakes1

இத்தொகுப்புகள்  சற்று போர் அடித்திருக்கும்  என்று எண்ணுகிறேன்…மென்மேலும் உங்கள் கருத்துகளை கூறுவீர்கள் என்று நான் நம்புகிறேன்..என் நண்பருக்கு மிக்க நன்றி கூற நான் கடமை பட்டு இருக்கிறேன்…

நன்றி நண்பரே…

மென்மேலும் கவனிக்க :http://mabig.wordpress.com/